close
Choose your channels

ராஜூ-பாவனி இடையே வெடித்தது சண்டை!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 59வது நாளின் முதல் புரமோ வீடியோவில் ராஜு மற்றும் பாவனி இடையே ஏற்படும் சண்டை குறித்த காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ரெட் டிவி, புளூ டிவி என இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜு, பாவனி, இமான் அண்ணாச்சி, அமீர், தாமரை, அக்சரா ஆகியோர் இருக்கும் அணியில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ‘போராடி தோல்வி அடைவது வேறு, ஒன்றுமே பண்ணாமல் தோல்வி அடைவது என்பது வேறு என அமீர் தங்களுடைய அணியின் பலவீனத்தை தெரிவிக்கிறார்.

’நான் ஒரு கேள்வி கேட்கும் போது எந்தவிதமான ரெஸ்பான்ஸ் இல்லை’ என்று பாவனி குற்றஞ்சாட்ட, அதற்கு, ‘உனக்கு எதுக்கு நான் ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டுமென ராஜு திருப்பிக் கேட்கிறார்.

’இந்த டாஸ்க்கில் நமது அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரிய வேண்டுமல்லவா’ என்று பாவனி பதிலளிக்கின்றார். இதுகுறித்து பாவனி மற்றும் ராஜூ இடையே சண்டை நடைபெறுகிறது. ‘எப்பொழுது பார்த்தாலும் சண்டை சண்டை போடுவதா? எனக்கு வேலையா வேறு வேலை இல்லையா? என ஆதங்கத்துடன் பாவனி கேட்கும் காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளன.

மேலும் ’நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள் என்பது உங்களுக்கும் தெரியவில்லை, அவருக்கு தெரியவில்லை, என்ன டாஸ்க் விளையாடுகிறீர்கள் என அமீரும் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியிடம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் காட்சிகளோடு இன்றைய முதல் புறம் முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.