ராஜூ-பாவனி இடையே வெடித்தது சண்டை!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 59வது நாளின் முதல் புரமோ வீடியோவில் ராஜு மற்றும் பாவனி இடையே ஏற்படும் சண்டை குறித்த காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ரெட் டிவி, புளூ டிவி என இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜு, பாவனி, இமான் அண்ணாச்சி, அமீர், தாமரை, அக்சரா ஆகியோர் இருக்கும் அணியில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ‘போராடி தோல்வி அடைவது வேறு, ஒன்றுமே பண்ணாமல் தோல்வி அடைவது என்பது வேறு என அமீர் தங்களுடைய அணியின் பலவீனத்தை தெரிவிக்கிறார்.

’நான் ஒரு கேள்வி கேட்கும் போது எந்தவிதமான ரெஸ்பான்ஸ் இல்லை’ என்று பாவனி குற்றஞ்சாட்ட, அதற்கு, ‘உனக்கு எதுக்கு நான் ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டுமென ராஜு திருப்பிக் கேட்கிறார்.

’இந்த டாஸ்க்கில் நமது அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரிய வேண்டுமல்லவா’ என்று பாவனி பதிலளிக்கின்றார். இதுகுறித்து பாவனி மற்றும் ராஜூ இடையே சண்டை நடைபெறுகிறது. ‘எப்பொழுது பார்த்தாலும் சண்டை சண்டை போடுவதா? எனக்கு வேலையா வேறு வேலை இல்லையா? என ஆதங்கத்துடன் பாவனி கேட்கும் காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளன.

மேலும் ’நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள் என்பது உங்களுக்கும் தெரியவில்லை, அவருக்கு தெரியவில்லை, என்ன டாஸ்க் விளையாடுகிறீர்கள் என அமீரும் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியிடம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் காட்சிகளோடு இன்றைய முதல் புறம் முடிவுக்கு வருகிறது.

More News

பிரம்மாண்டம், பிரமிப்பு நிறைந்த மரைக்காயர்... டிரெய்லர் வெளியீடு!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி 3 தேசிய விருதுகளையும் 3 கேரள விருதுகளையும் அள்ளிக் குவித்து இருக்கும் திரைப்படம் “மரைக்காயர் அரபுக்கடலின் சிங்கம்“.

பிறந்தநாளில் பசுமை மீது பாசம் காட்டும் இளம் நடிகை… வைரல் வீடியோ!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ராஷி கண்ணா தற்போது தமிழ் சினிமாவிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன்… மனம் வருந்திய முக்கிய வீரர்!

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

தனுஷே சந்தோஷப்படுவார்: 'மாநாடு' சர்ச்சை குறித்து வெங்கட்பிரபு விளக்கம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா கேரக்டருக்கு தனுஷ்கோடி என்ற பெயர் வைத்தது குறித்து தனுஷ்

சதீஷின் 'நாய்சேகர்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: வேற லெவல் அப்டேட்!

தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தற்போது கதாநாயகனாக 'நாய் சேகர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது