close
Choose your channels

வெளியில் ஒரு வதந்தி பரவுது: பிக்பாஸ் ரம்யாகிருஷ்ணன்

Sunday, November 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று முதல் முறையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதும் அவரது பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிபி மற்றும் அக்சரா இடையே இருந்த பிரச்சனையை அவர் தீர்த்து வைத்தது அவரது முதிர்ச்சியை காட்டுவதாகவும் சிபிக்கு ஒரு குறும்படத்தையும் போட்டு அவர் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய நாளில் வெளியான முதல் புரமோவில் இந்த வாரம் எவிக்சன் இருக்குமா இருக்காதா என்ற ஒரு வதந்தி வெளியில் பரவி வருகிறது என்றும் ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் எவிக்ஷன் உண்டு என்றும் ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே நமக்கெல்லாம் ஜாலியான நாள் என்றும், ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டென்ஷனான நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று போலவே இன்றைய நிகழ்ச்சியையும் ரம்யா கிருஷ்ணன் மிகவும் சுவராசியமாக தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.