வெளியில் ஒரு வதந்தி பரவுது: பிக்பாஸ் ரம்யாகிருஷ்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று முதல் முறையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதும் அவரது பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிபி மற்றும் அக்சரா இடையே இருந்த பிரச்சனையை அவர் தீர்த்து வைத்தது அவரது முதிர்ச்சியை காட்டுவதாகவும் சிபிக்கு ஒரு குறும்படத்தையும் போட்டு அவர் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய நாளில் வெளியான முதல் புரமோவில் இந்த வாரம் எவிக்சன் இருக்குமா இருக்காதா என்ற ஒரு வதந்தி வெளியில் பரவி வருகிறது என்றும் ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் எவிக்ஷன் உண்டு என்றும் ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே நமக்கெல்லாம் ஜாலியான நாள் என்றும், ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டென்ஷனான நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று போலவே இன்றைய நிகழ்ச்சியையும் ரம்யா கிருஷ்ணன் மிகவும் சுவராசியமாக தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மோசடி மன்னனுடன் முத்தம்: புகைப்படம் வைரலானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் மோசடி மன்னனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவனமாக இருக்க வேண்டும்: திரைப்படத்துறையை விமர்சனம் செய்வது குறித்து அண்ணாமலை கருத்து!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

கொரோனா வந்தாலும் கமல்ஹாசன் நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கமலஹாசன் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புளூசட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

புளூசட்டை மாறன் இயக்கிய 'ஆன்டி இண்டியன்' என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது:

மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்: பிக்பாஸில் இன்னும் ஒரு ஆச்சரியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.