உன் மேல பயங்கரமா கோபமா இருக்கேன்: ஸ்ருதியை எச்சரிக்கும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடித்து உள்ளது என்பதும் போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவு இப்போதுதான் ஆரம்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் தாமரையின் காயினை ஸ்ருதி திருடிவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அதே வாக்குவாதம் தொடர்வது போல இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ள காட்சிகள் உள்ளன.

ஸ்ருதியை மீண்டும் திட்டியபடி தாமரை பேச, ’ தேவையில்லாத வார்த்தைகளை விடாதீர்கள் என ஸ்ருதி கூறுகிறார். அதற்கு தாமரை நான் காயினை பற்றி பேசவில்லை, நீ செய்த வேலை எனக்கு பிடிக்கல என்றுதான் சொன்னேன்’ என்று கூறுகிறார். அப்போது பாவனி ரெட்டி, ‘நான் ஸ்ருதிக்கு ஹெல்ப் பண்ண வில்லை என கூற இதனை அடுத்து ஸ்ருதிக்கும் பாவனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

’நீ இப்படி பண்ண கூடாது ரொம்ப தப்பு, நான் உன்மேல பயங்கரமா கோபமாக இருக்கிறேன் ஒழுங்கா போயிரு என தாமரை கூறுவதோடு இன்று இரண்டாவது புரமோ முடிவுறுகிறது. மொத்தத்தில் காயினை பறிகொடுத்த கோபத்தில் இருக்கும் தாமரையை வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்தியபோதிலும் அழுது கொண்டே இருப்பது பரபரப்பை ஏற்படுத்துமா என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.