close
Choose your channels

நீ போய்ட்டா எல்லாரும் அழுவாங்க: அபிஷேக்கை கலாய்த்த போட்டியாளர்!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக்கை தற்போது சக போட்டியாளர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர் என தெரிகிறது. ஏற்கனவே பார்வையாளர்கள் அவரை பற்றி புரிந்து, அறிந்து கொண்டு கலாய்த்து வருகின்றனர் என்பதும் அவரை வெளியேற்ற வேண்டும் என்று கிட்டத்தட்ட போர்க்கொடி தூக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பஞ்சதந்திரம் டாஸ்க்கில், ‘என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது என்றும் அபிஷேக் கூற, அதற்கு சுருதி ’ஏன் நம்மளை எல்லாம் ஒரு டீம் என்று நீ யோசிக்கின்றாய் என்று கேட்கிறார். அப்புறம் ஏன் நீ என் கூட சேர்ந்து விளையாடுகிறாய் என்று அபிஷேக் கேட்க, நான் உன்னுடன் விளையாடவில்லை நான் இசை கூட விளையாடுகிறேன் என்று சொல்ல, உடனே அபிஷேக் இசையால் தனியாக விளையாட முடியாது என்று கூற, உடனே ’என்னால் ஏன் தனியாக விளையாட முடியாது என இசை பதிலடி கொடுக்கிறார்

மேலும் பாவனி உனக்கு ஸ்டிராங் பிளேயர், நாங்கல்லாம் வீக் பிளேயரா? என்று சுருதி மீண்டும் பதிலடி கொடுக்க அபிஷேக் வேறு வழியில்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். அதன்பின்னர் சிபி தன் பங்குக்கு கலாய்க்கும் வகையில் ’மச்சான் நீ போய்ட்டா பிக்பாஸ்ல்ல உள்ளவங்க எல்லாரும் அழுவாங்க’ என்று செமையாக கலாய்க்க இப்பொழுதுதான் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அபிஷேக்கை நன்றாக புரிந்து வைத்துள்ளனர் என்பது தெரியவருகிறது. இனி போகப்போக என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.