close
Choose your channels

நான் அடக்கமா இல்லையா? சிபியுடன் மல்லுகட்டும் தாமரை!

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நகரத்தார் மற்றும் கிராமத்தார் என்ற டாஸ்க் கடந்த 2 நாட்களாக நடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் விவாத மேடை ஒன்று நடக்க இருப்பதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

’பட்டிக்காடா பட்டணமா’ என்ற இந்த விவாத மேடையில் முதலில் ராஜு பேசும்போது நகரத்தில் இருந்து வந்ததாக கூறும் இமான் அண்ணாச்சி அவருடைய பேச்சில் நகரத்தின் சாயல் கொஞ்சமும் இல்லை என்று கூற அதற்கு இமான் அண்ணாச்சியின் ரியாக்சன் சூப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பேசிய தாமரை, ‘உடை உடுத்துவதில் கிராமம் மாதிரி வராது என்றும் இங்கு ஒரு சிலர் துணி உடுத்துவது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். குறிப்பாக அவர் ஸ்ருதியை மறைமுகமாக கூறுவது போல் தெரிகிறது.

இதற்கு பதிலளித்த சிபி, ‘தாமரை சொன்னது சரி இல்லை என்றும் உடை உடுத்துவது அவர்களுடைய இஷ்டம் என்றும் கூறிய அவர் நீங்கள் முதலில் அடக்கமாக இருக்கிறீர்களா என்று கேட்டார்.

இதனால் ஆவேசமான தாமரை, ‘அடக்கம் உங்களிடம் இருக்கின்றதா என்று சொன்னீர்களே, நான் என்ன எந்த விதத்தில் அடக்கமாக இல்லை என்று வாதம் செய்ய இதனை தொடர்ந்து இருவரும் ஆவேசமாக மோதிக் கொள்ளும் காட்சிகளும், அபினய் இருவரையும் சமாதானப்படுத்தும் காட்சிகளும் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன. மொத்தத்தில் அபிஷேக் இல்லாத குறையை தாமரை தீர்த்து வைத்து விடுவாரோ என்ற ஐயம் தான் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.