தாமரையுடன் காரசாரமாக மோதும் பிரியங்கா: அடுத்த எலிமினேஷனா?

கடந்த சில வாரங்களாகவே தாமரையுடன் மோதியவர்கள் எல்லிமினேஷன் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா தாமரையுடன் காரசாரமாக மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வாரங்களாக வெளியேறிய போட்டியாளர்கள் அனைவருமே கடைசி நேரத்தில் தாமரையுடன் மோதியவர்கள் என்பதும் இது தற்செயலாக நடந்ததா அல்லது தாமரையுடன் மோதியதால் தான் அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா? என்பது விவாதத்துக்குரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. நேற்று வெளியேறிய இசைவாணி கூட கடைசி நேரத்தில் தாமரையுடன் மோதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் தாமரை மற்றும் பிரியங்கா கடுமையாக மோதிக் கொள்கின்றனர். தலைவராகும் தகுதி இல்லை என்று என்னை எப்படி நீங்கள் சொல்லலாம் என தாமரை பிரியங்காவிடம் கேட்க, அதற்கு ’வாய்ப்பு என்று வரும்போது தான் நீ அந்த கசப்புகளை சரி பண்ணனுமா? அதற்கு முன்னர் சரிசெய்து கொள்ளலாமே என்று பிரியங்கா கேட்க, அதற்கு ‘எந்த கசப்பு என்பதை சொல்லுங்கள்’ என தாமரை கேட்கிறார்.

’மனதில் பட்டதை சரியாக சொல்லுங்கள், என்ன கசப்பு என்னிடம் உள்ளது என்று தாமரை கேட்க அதற்கு பிரியங்கா பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றார். மேலும் ’ இன்றைய சூழ்நிலையில் உனக்கு தலைவராகும் தகுதி இல்லை என்று பிரியங்கா சொல்ல, ‘அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை’ என்று என்று தாமரை பதிலடி கொடுக்க இருவரும் காரசாரமாக மோதிக் கொள்ளும் காட்சி இன்றைய 2-வது புரமோவில் உள்ளது.

இன்றைய நாமினேஷனில் பிரியங்கா, தாமரை இருந்தால் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியுடன் இணைந்த கெளதம் மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 மாதங்களுக்கு பின் முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி!

தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் மிகச் சிறந்த பாடகியாக இருந்து வருபவர் ஷ்ரேயா கோஷல் என்பது தெரிந்ததே. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம்

ஸ்டண்ட் சில்வா இயக்கிய முதல் திரைப்படம்: ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் நடிகர் ஸ்டண்ட் சில்வா அவர்கள் முதல் திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில் அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

'மாநாடு' படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: அரசுக்கு வேண்டுகோள் விடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடித 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து தமிழக அரசுக்கு

தாமதமாக வெளிவந்தாலும் சரியான விளக்கம்: 'ஜெய்பீம்' விவகாரம் குறித்து சீமான்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் இது குறித்த கருத்து மோதல்கள்