close
Choose your channels

திடீரென கோஷம் போட்ட தாமரை: பிரியங்காவின் ரியாக்சன் என்ன தெரியுமா?

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸையே காமெடியாக கலாய்த்து ஆரம்ப காலகட்டங்களில் பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்ற பிரியங்கா, நாளாக ஆக தனது சுயரூபத்தை காண்பித்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் கூறிவருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களாக நிரூப், இமான் அண்ணாச்சி, தாமரை உள்பட ஒரு சிலரிடம் அவர் மோதும் காட்சிகள் அவரது இமேஜை சுக்குநூறாய் நொறுக்குவதாக பார்வையாளர்கள் மத்தியில் ஒரு எண்ணம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தாமரையுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த வாக்குவாதத்தில் ’தான் யாருடைய தொழிலையும் அவமதித்து பேசவில்லை என்றும் இந்த வீட்டில்தான் தாமரை நாடகமாடுகிறார் என்று தான் சொன்னேன் என்றும் பிரியங்கா விளக்கமளிக்கிறார்.

இதனை அடுத்து பேசிய தாமரை, ’பிரியங்கா என்னை மட்டம் தட்டி மட்டும் தான் பேசுகிறார் என்றும் இந்த வீட்டில் உசுப்பேற்றுவது பிரியங்கா மட்டும்தான்’ என கோஷம் போட அப்போது பிரியங்கா ’உரக்கச் சொல்’ என்று கூறுகிறார். மீண்டும் தாமரை, ‘உசுப்பேற்றுவது பிரியங்கா மட்டும் தான் என்றும் கூற மீண்டும் ’உரக்கச் சொல்’ என்றும் பிரியங்கா கூறுவதை பார்க்கும்போது இருவரில் யாராவது ஒருவர் அல்லது இருவருமே எலிமினேட் செய்யப்பட வேண்டியவர்கள் என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.