close
Choose your channels

இந்த வார தலைவர் போட்டி: பிரியங்கா கேள்விக்கு பதிலடி கொடுத்த தாமரை!

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 50வது நாளாக நடைபெற உள்ள நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரத்திற்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதும் அதற்கான டாஸ்க் வைக்கப்படும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வார தலைவர் போட்டியில் வருண், தாமரை, இமான், அக்சரா மற்றும் ராஜு ஆகியோர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ஒரு பெட்டி கொடுக்கப்பட்டு, அதில் அதிகம் யார் பஞ்சை நிரப்ப வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க்.

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பெட்டிகளில் பஞ்சுகளை நிரப்பி வருகின்றனர். அப்போது தாமரையிடம், ‘நீ தலைவராகி என்ன செய்ய போகிறாய்? என பிரியங்கா கேட்க, அதற்கு ’நீங்கள் சொல்லிவிட்டா தலைவர் ஆனீர்கள் என தாமரை பதிலடி கொடுத்தது சக போட்டியாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து தாமரை ரிஜெக்டட் என சீல் குத்துமாறு பிரியங்கா, நிரூப்பிடம் கூற, நிரூப், தாமரை கையில் சீல் குத்தியதால் தலைவர் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மீதியுள்ள போட்டியாளர்களில் இந்த வார தலைவர் யார் என்பதை அடுத்த புரமோ வீடியோ அல்லது இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.