close
Choose your channels

பாவனியை அழவைத்தது யார்? முட்டி மோதிய ராஜூ!

Tuesday, December 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று நடைபெற்ற முதல் கட்ட டாஸ்க்கில் நிரூப் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் சமமான எண்ணிக்கையில் 10 முட்டைகள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்றும் எதிர் போட்டியாளர்களின் முட்டைகளை உடைத்து அவர்கள் வெற்றி அடையாமல் போட்டியாளர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் முடிவில் எந்த இரண்டு நபர்களின் முட்டை கூட்டில் முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ அந்த இரண்டு நபர்கள் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இதனை அடுத்து போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களின் முட்டைகளை உடைக்க முயற்சிக்கின்றனர். பாவனியின் கூட்டில் உள்ள முட்டைகளை உடைக்க ராஜூ வரும்போது பாவனி அதனை தடுக்க முயற்சிக்கின்றார். ஆனால் ராஜூ தனது தலையால் முட்டி மோதி பாவனியின் முட்டைகளை உடைக்கின்றார். இதனால் பாவனி அழுதுகொண்டே உள்ளே செல்லும் காட்சிகள் இன்றைய புரமோவில் உள்ளது. நேற்றைய டாஸ்க்கின்போது ராஜூவை பாவனி கடுமையாக விமர்சனம் செய்ததன் விளைவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதேபோல் தாமரையும் பிரியங்காவும் ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டும் காட்சிகளும் உள்ளன. மொத்தத்தில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.