close
Choose your channels

மலர்மாலை போட்ட பாவனியை கடுமையாக விமர்சனம் செய்த ராஜூ!

Monday, January 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதும் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. நாமினேஷன் செய்பவர் நாமினேஷன் செய்யப்போவருக்கு மலர் மாலை அணிவித்து ஓபன் நாமினேஷன் செய்ய வேண்டும் என்றும் நாமினேஷனுக்கான காரணத்தை அவரிடமே கூற வேண்டும் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்,

இதனை அடுத்து நிரூப்புக்கு மாலை அணிவித்து நாமினேஷன் செய்யும் சிபி, ‘நீ இந்த கேமை பொறுத்தவரை உண்மையாக ஆடவில்லை என்று கூறுகிறார். அதேபோல் ராஜூவுக்கு மாலை அணிவித்து நாமினேஷன் செய்யும் பாவனியிடம், ‘நீ நேற்று இரவு ஒன்று பேசுவாய், இன்று காலை வேறு மாதிரி பேசுவாய்’ என கடுமையாக விமர்சனம் செய்கிறார்,

அதேபோல் பிரியங்காவுக்கு தாமரை மாலை போடும் போது, ‘நான் மட்டும் உனக்கு ரொம்ப ஈசியாக போய் விட்டதா? பிரியங்கா தானே அடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாயா? என்று கேள்வி எழுப்பும் போது தாமரை அதற்கு, ‘தப்பு செய்தவனை விட தப்பு செய்ய தூண்டுபவர் ரொம்ப கெட்டவன்’ என்று பதிலளிக்கிறார்,

மொத்தத்தில் இந்த வித்தியாசமான ஓப்பன் நாமினேஷன் இன்றைய நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.