close
Choose your channels

உன்னால் எனக்கு பிபி ஏறிடுச்சுடா: புலம்பிய போட்டியாளரின் தந்தை

Wednesday, December 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரும் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று அக்ஷராவின் தாய் மற்றும் சகோதரர் வந்தனர் என்பதும் அதேபோல் சிபியின் தந்தை மற்றும் மனைவி வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று நிரூப் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துளார். பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்தும் கூறிய நிரூப் தந்தை, ’நான் நிரூப்புக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்க்கின்றேன் என்றும் கூறினார்.

மேலும் நிரூப்பிடம், ‘அபினய் கையைப் பிடித்துக்கொண்டு நீ அன்று பேசிய போது எனக்கு பயங்கர கோபம் வந்தது என்றும் உன்னால் தான் எனக்கு பிபி எல்லாம் ஏறிப் போய்விட்டது என்றும் கூறினார்.

மேலும் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.