பிக்பாஸ் சீசன் 5: முதல் வார கேப்டன் யார்? ஐந்து பேர் போட்டி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று தொடங்கி உள்ள நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்கள் யார் யார் என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் தினந்தோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த புரமோ வீடியோ விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளிவரும் நிலையில் சற்று முன் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது

இதில் இந்த வீட்டின் முதல் கேப்டன் யார் என்பதை தேர்வு செய்யும் அறிவிப்பை பிக்பாஸ் வெளியிடுகிறார். இந்த பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருக்க தகுதி உள்ளவர்கள் என்று நினைக்கும் போட்டியாளர்கள் கேப்டன் பதவிக்கு போட்டியிட முன் வரலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்

இதனை அடுத்து ஐந்து பேர் கேப்டன் பதவிக்கு போட்டியிடுவதற்காக முன்வருகின்றனர். அவர்களில் ராஜு ஜெயமோகன், நமீதா, சின்னபொண்ணு, பவானி மற்றும் நிரூப் ஆகிய 5 பேரும் போட்டியிடுவதாக அறிவிக்கின்றனர், அப்போது பிக்பாஸ் ’யார் யார் எந்தெந்த பிரிவின் கேப்டனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, ராஜூ ஜெயமோகன் தான் பாத்ரூம் பிரிவின் கேப்டன் என கூறுகிறார். இதனை அடுத்து ப்ரியங்கா அவரை, ‘அதுதான் இருப்பதிலேயே ஈஸியான வேலை’ என கலாய்த்துள்ளதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த வார கேப்டன் யார்? என்பதை அடுத்தடுத்த புரமோ மூலம் தெரிய வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களும் அவர்களின் முழு விபரங்களும்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒவ்வொரு போட்டியாளரையும் அறிமுகம் செய்து

படுக்கையறையில் சாகசம் செய்த நடிகை அஞ்சலி: வைரல் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை அஞ்சலி படுக்கையறையில் சாகசம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

ரஜினி, கமல் வெற்றிப்பட இயக்குனருடன் முதல்முறையாக இணையும் தனுஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவருடன் நடிகர் தனுஷ் இணைய இருப்பதாக

சன்னிலியோன் இப்படிப்பட்ட நபரா? நடிகர் சதீஷின் ஆச்சரியமான டுவிட்!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் குறித்து நடிகர் சதீஷ் ஆச்சரியமான சில விஷயங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது 

போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கான் குடும்பத்தின் முக்கிய நபர் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் குடும்பத்தின் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.