close
Choose your channels

கோடி ரூபாய் வைத்தாலும் எடுக்க மாட்டேன்: கூறுவது இந்த போட்டியாளரா?

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பணப்பெட்டி நேற்று வைக்கப்பட்டது என்பதும் இந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என பிக்பாஸ் அறிவித்தும் யாரும் பணப் பெட்டியை எடுக்க முன்வரவில்லை என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பணப்பெட்டியின் மதிப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் இன்றைய முதல் புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் பணப்பெட்டியின் அருகில் சென்று தாமரை அதை பார்த்துகொண்டிருக்கும் போது அங்கு வரும் நிரூப் பணப்பெட்டியை எடுக்காதே என்று கூறுகிறார்.

அப்போது தாமரை, ‘நான் ஏன் எடுக்க போறேன், இந்த வீட்டில் தங்குவதை விட எனக்கு பணமா பெரிது? கோடிக் கணக்கில் ரூபாய் வைத்தாலும் நான் எடுக்க மாட்டேன். சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கிறது’ என்று தாமரை கூறுகிறார். மேலும் நீ எடுத்துக் கொண்டு இதுவும் ஒரு கேம்தான் என்று வெளியே போய் விடாதே என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனவே பண பெட்டியை தாமரை எடுக்க மாட்டார் என்பது இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் அந்த பணப்பெட்டியை எடுப்பவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களில் பலர் தாமரை தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமரையின் உறுதியான முடிவு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது என்பதும் அவர் மீது இன்னும் மரியாதை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.