close
Choose your channels

அபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா?

Tuesday, October 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் அபிஷேக் காலில் விழுந்து கதறி அழும் தாமரை குறித்த காட்சிகள் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வழங்கப்பட்டிருக்கும் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க்கில் அதிக விலை மதிப்புள்ள காயின்களை எடுத்தவர்கள் நாமினேஷனலில் இருந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் அதிக காயின்களை எடுத்தவர் நாமினேஷனில் இல்லை என்றால் இன்னொருவரை காப்பாற்றலாம் என்ற விதியும் இருப்பது போல் தெரிகிறது.

இந்த நிலையில் தாமரை இடம் சென்று அபிஷேக் உன்னை காப்பாற்றுவதற்காக நான் எல்லோரிடமும் பேசி வருகிறேன் என்று சொல்ல, உடனே தாமரை அவரின் காலில் விழுந்து கதறி அழுகிறார். தாமரையை கட்டி பிடித்து அபிஷேக் ஆறுதல் சொல்வது போன்ற காட்சிகள் இன்றைய புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களும் தாமரையை காப்பாற்றவே முயற்சிக்கின்றனர் என்பதும் சின்னப்பொண்ணுவை இந்த வாரம் வெளியேற்ற திட்டமிடுவது போன்றும் தெரிகிறது. எனவே இன்றைய டாஸ்க்கில் அதிக காயின்களை கைப்பற்றியவர் தாமரையை காப்பாற்றுவார் என தெரிகிறது.

ஆனால் நெட்டிசன்கள் இதுகுறித்து கூறிய போது தாமரையை பொதுமக்களால் கண்டிப்பாக காப்பாற்றிவிடுவார்கள். எனவே அந்த காயினை வேஸ்ட் செய்யாமல் வேறு யாரையாவது காப்பாற்றுங்கள் என்று கூறிவருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.