பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா? சோகத்தில் செளந்தர்யா ரசிகர்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இன்று இறுதி நாள் என்பதால் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த நிலையில், சற்று முன் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 இறுதிப்போட்டியில் முத்துக்குமரன், பவித்ரா, விஷால், ராயன் மற்றும் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சீசனுக்கான டைட்டிலை முத்துக்குமரன் வென்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இரண்டாவது இடத்தில் சௌந்தர்யா, மூன்றாவது இடத்தில் விஷால், நான்காவது இடத்தில் ராயன் மற்றும் ஐந்தாவது இடத்தில் பவித்ரா இடம்பிடித்ததாக தெரிகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னராக சவுந்தர்யா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
பிக் பாஸ் கோப்பையை மட்டும் இன்றி பரிசுத்தொகையும் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த தகவல் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் தெரிய வரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments