close
Choose your channels

நாமினேஷனில் திடீர் திருப்பம்: ஒருவர் தப்பிக்க வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்!

Tuesday, October 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள 10 பேர்களில் ஒருவர் நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை பிக் பாஸ் இன்று கொடுத்துள்ளார். இன்று பிக்பாஸ் வீட்டில் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது.

இன்று பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது என்றும், விலைமதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பாதுகாப்பதும் போட்டியாளர்களின் கடமை என்றும், போட்டியாளர்கள் ஒரு நாணயத்தை கைப்பற்றியவுடன் பிக்பாஸிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இதில் அதிகம் நாணயங்களை கைப்பற்றியவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இன்றைய பஞ்சதந்திரம் டாஸ்க்கில் அதிக நாணயங்களை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து தப்பிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.