close
Choose your channels

சாப்பாட்டில் கணக்கு பார்த்த பிரியங்கா: கடுப்பான சிபி கூறியது என்ன தெரியுமா?

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எல்லாருக்கும் சாப்பாடு இருக்குமா? என்பதை பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும் என பிரியங்கா கூறியதற்கு சிபி கண்டித்த சம்பவம் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் தற்போது அரசியல் மாநாடு என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் போட்டியாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்து அரசியல் கட்சிகளாகவும், பிரச்சாரங்கள் செய்யும் நபர்களாகவும், மாநாடு நடத்தும் அரசியல்வாதிகளாகவும் மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் வீடியோவில் சிபி உள்பட போட்டியாளர்கள் சிலர் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த பிரியங்கா, ‘எல்லோருக்கும் சாப்பாடு இருக்கா? என்று பார்த்து விட்டு சாப்பிடுங்கள் என்றும், சாப்பாடு எடுக்கும்போதும், ஊறுகாய் எடுக்கும்போதும் எல்லோருக்கும் அது பத்துமா என்று பார்த்து விட்டு சாப்பிடுங்கள் என்று கூறினார்.

அதனை கேட்ட சிபி, ’சாப்பிடும்போது இதுபோல் இது மாதிரி பேசக்கூடாது என்றும் சாப்பிடும்போது எதுவும் பேசக்கூடாது என்றும் கண்டிக்கிறார். இந்த சம்பவத்தில் இருந்து இருவருக்கும் மோதல் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.