சனம்ஷெட்டியை மனதார பாராட்டிய தர்ஷன்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷன், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சனம்ஷெட்டி ஆகிய இருவர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் தற்போது சனம் ஷெட்டியை தர்ஷன் மனதார பாராட்டி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிக்பாஸ் தர்ஷன் மற்றும் பிக்பாஸ் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென சனம்ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என தர்ஷன் கூறியதாகவும் இதனையடுத்து இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம்ஷெட்டி கலந்து கொண்டதை அடுத்து அவரது விளையாட்டு குறித்து கருத்து கூறிய தர்ஷன், சனம் ஷெட்டியுடன் உள்ள உறவு குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் சிறப்பாக விளையாடினார் என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது தர்ஷன், லாஸ்லியா உடன் இணைந்து ’கூகுள் குட்டப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து தர்ஷன் கூறியபோது ’ஏற்கனவே அறிமுகமான லாஸ்லியா உடன் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அது மட்டுமின்றி லாஸ்லியா ஒரு இலங்கை பெண்ணாகவே நடிப்பது தனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் அது மட்டுமின்றி மேலும் 2 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு தனக்கு சிறந்த ஆண்டாக இருப்பதாகவும் தர்ஷன் கூறியுள்ளார்.
 

More News

நயன்தாரா படத்திற்கு பாராட்டுக்களை குவித்த நடிகர் கார்த்தி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த 'கூழாங்கல்' என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சர்வதேச டைகர் விருது கிடைத்துள்ள நிலையில்

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸா? அசத்தும் இந்திய முன்னணி நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருந்து வரும் ஹெச்.சி.எல் தன்னுடைய ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் போனஸ் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்திய அளவில் டிரெண்ட் ஆன சிம்புவின் 'குட் மார்னிங்' மெசேஜ்: அப்படி என்ன இருக்கு அதில்?

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை சிறிதளவு கூட குறையவில்லை என்பது அவ்வப்போது

ரத்தக் கலரில் வெள்ளப் பெருக்கு? விசித்திர சம்பவத்தால் அலறும் மக்கள்!

இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பெக்கலோங்கன் நகர் முழுவதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

உதயநிதியின் அரசியலுக்கு உதவ போகிறேனா? சந்தானம் விளக்கம்!

சந்தானம் நடித்த 'பாரீஸ் ஜெயராஜ்' படத்தின் பிரஸ்மீட் இன்று நடந்த நிலையில் இந்த பிரஸ்மீட்டில் சந்தானத்திடம் கேட்கப்பட்ட சுவராஸ்யமான கேள்விகளுக்கு அவரும் சுவராஸ்யமான பதில்களை அளித்தார்