பிக்பாஸ் ஃபினாலேவுக்கு டைட்டில் வின்னரே வரவில்லையா? சுரேஷ் சக்கரவர்த்தியின் நக்கல் டுவிட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் நாளை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது என்பதும் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் நாளை டைட்டில் பட்டமும் மற்றும் ரூபாய் 50 லட்சம் பரிசு பணத்தையும் பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சீசனின் இறுதிப்போட்டி நேரடியாக ஒளிபரப்பாகவில்லை என்றும் 5 வது சீசனில் இறுதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்றே நடைபெறுவதாகவும், அதன் பின்னர் நாளை ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் கிராண்ட் ஃபினாலே நடைபெறும்போது முந்தைய சீசன்களின் டைட்டில் வின்னர் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆரி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கிராண்ட் ஃபினாலேவில் பங்கு பெறவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது ட்விட்டரில் நக்கலுடன் கூறியிருப்பதாவது:

என் மனைவி: டீ ஆறிப்போச்சு

நான்: ஆரியே போகல, டீ ஆறிப்போனா என்ன? ஆறாட்டி என்ன?

என பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சீசனின் கிராண்ட் ஃபினாலேவில் ஆரி கலந்து கொள்ளவில்லை என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரெகுலராக அப்டேட் செய்து வருபவர்களும் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சியான் விக்ரமின் 'மஹான்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரிலீஸ் தேதி எப்போது?

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த 'மஹான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை மோசமானதால் திடீரென வெளியேறிய பிரியங்கா: ஃபினாலேவுக்கு வருவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெற்றிகொண்டு 50 லட்ச ரூபாய் பணத்தை வெல்வது ராஜூவா? அல்லது பிரியங்காவா? என்ற கேள்வி

நடிகை த்ரிஷாவை தொடர்ந்து நடிகை ராய் லட்சுமிக்குக் கிடைத்த கவுரவம்!

தமிழ், இந்தி மொழி சினிமாக்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர்

74 வருட பிரிவிற்குப் பிறகு முதல் சந்திப்பு… மனதை உலுக்கும் நெகிழ்ச்சி  சம்பவம்!

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாகச் சிறு வயதிலேயே

புஷ்பாவாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்… இணையத்தில் வைரலான புகைப்படம்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா“.