close
Choose your channels

எனக்கு இல்லைன்னா எல்லாரும் சாவட்டும்: வனிதா ஆவேசம்

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில்  ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே சுறுசுறுப்பாகி உள்ளது .

இந்த நிலையில் இன்றைய புரொமோ வீடியோவில் தனக்கு காபி வேண்டும் என்று அடம் பிடிக்கும் வனிதா,  எனக்கு காபி கிடைக்கவில்லை என்றால் எல்லாரும் சாகட்டும் என்று ஆவேசமாக பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு தலை வலிக்கிறது, எனக்கு காது வலிக்கிறது, எனக்கு காப்பி குடித்தே ஆக வேண்டும், எனவே காபி பொடி அனுப்புங்கள் என பிக்பாஸிடம் வனிதா கேட்கிறார். காபி பொடி லக்சரி பட்ஜெட்டில் வரவில்லை என்று அனிதா கூறிய போதும், உங்கள் ஒருவரால் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களுக்கும் மனக்கஷ்டம் ஏற்படுகிறது என பாலாஜியும் கூறிய போது அவர்களை எதிர்த்துப் பேசிய வனிதா, ‘எனக்கு காபி வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.

மேலும் டீத்தூள் மட்டுமே வந்திருக்கும் நிலையில், ‘எனக்கு காபி கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் டீ கிடைக்கக்கூடாது, எல்லாரும் சாகட்டும்’ என்று அனைத்து டீத்தூள் பாக்கெட்டுக்களையும் எடுத்துக்கொண்டு அவர் சென்றது அகங்காரத்தின் உச்சம் என கருதப்படுகிறது. 

மொத்தத்தில் வனிதா ஒருவர் மற்ற அனைவரையும்ஆட்டிப்படைத்து வருவதை அடுத்து அவர் விரைவில் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.