close
Choose your channels

'சம்பவம் இனிமேல் தான் ஆரம்பம்': செம கோபத்தில் இருக்கும் வனிதா!

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஜனவரி 30ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ள வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் மற்றும் ஜூலி ஆகிய இருவரும் கலந்து கொள்வது உறுதிசெய்யப்பட்ட நிலையில் சற்று முன்னர் வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான புரமோ வீடியோவில் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட காட்சியை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போன்றும், இதனை அடுத்து பிக்பாஸ், ’திரும்பத் திரும்ப அதையே பார்த்தது போதும், பிக்பாஸ்அல்டிமேட் நிகழ்ச்சிக்கு திரும்ப வாங்க’ என்று கூறுகிறார் .

இதனை அடுத்து ஆவேசமான வனிதா, ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, சம்பவம் இனிமேல்தான் ஆரம்பம்’ என ஆவேசமாக கூறும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.