வருணுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய வருண், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியை சந்தித்து வாழ்த்து பெற்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வருண் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பாக டாஸ்குகளில் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 80 நாட்களை கடந்து வருண் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அக்ஷரா உடன் வெளியேற்றப்பட்டார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அக்ஷரா உள்பட ஒரு சிலரை வருண் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியை வருண் சமீபத்தில் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை ஆரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தம்பி வருணை சந்தித்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. கண்டிப்பாக பிக் பாஸ் உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினீர்கள். பிக்பாஸ் வீட்டில் உங்களது பயணம் தான் முடிந்திருக்கிறது, ஆனால் கலை உலகில் உங்களது பயணம் தற்போதுதான் தொடங்கியுள்ளது. உங்களின் கலைப்பயணத்துக்கு எனது இனிய வாழ்த்துக்கள்’ என ஆரி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

திருவான்மியூர் டிக்கெட் கவுண்டர் கொள்ளை சம்பவம்… திடீர் திருப்பத்தால் அதிர்ச்சி!

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று ஊழியர் ஒருவரை துப்பாக்கிமுனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்கப்போகும் பிரபலம் இவர்தான்!

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தகவல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்த நாளில் வெளியான அடுத்த பட டைட்டில்: ஜீவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகன் என்பது தெரிந்ததே

மனைவி, மகன்களை கொலை செய்து தற்கொலை செய்த சென்னை வங்கி அதிகாரி: ஆன்லைன் ரம்மியால் விபரீதம்

ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹீரோவாக தயாராகி வருகிறாரா சமுத்திரகனி மகன்? வைரல் புகைப்படம்!

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் ஹீரோவாக தயாராகி வருவது போன்று அந்த புகைப்படம்