விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் விஜே மகேஸ்வரி..!

  • IndiaGlitz, [Monday,February 06 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரி 35 வது நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் குறித்து கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அசீமுக்கும் மகேஸ்வரிக்கும் காரசாரமான சண்டைகள் நடந்தது என்றும் அதுமட்டுமின்றி எவிக்சனுக்க்கு பிறகு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோதும் கூட அவர் அசீமுடன் காரசாரமாக விவாதம் செய்தார்.

இதனை அடுத்து மகேஸ்வரியை அசீம் ஆதரவாளர்கள் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். அவரது ஒவ்வொரு பதிவிற்கும் மிக மோசமான கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்தனர். அவரை மட்டும் இன்றி அவரது மகன் குறித்தும் மோசமான பதிவை செய்ததால் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது மகனை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘என் மகன் ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி, நச்சு ஆண்மை நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என்று நான் நம்புகிறேன். நீ அவ்வாறாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். உன்னை நான் பாதுகாப்பேன்’ என்று கூறியுள்ளார். மேலும் மோசமாக விமர்சனம் செய்பவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

More News

பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்கிய தனுஷ் பட நடிகை: நெட்டிசன்கள் பாராட்டு..!

 தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்கியதாக 'வாத்தி' பட நடிகை தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

துருக்கி நிலநடுக்கத்தில் 1300 பேர் பலி: உடனடி உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!

துருக்கியில் இன்று காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 1300 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும் மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாகவும்

'நாங்க மதுரையில் இருந்து வந்திருக்கோம்': ராஜஸ்தானில் ரஜினியை சுற்றி வளைத்த ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள்

எங்களுக்கு என்ன நடந்ததோ, அது அப்படியே அவங்களுக்கும் நடக்கணும்: 'வசந்த முல்லை' டிரைலர்

பாபிசிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்த 'வசந்த முல்லை' என்ற திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

உங்களால நாங்க நல்லா இருக்கணும், உங்களவிட நல்லா இருந்துடக்கூடாது.. கவினின் 'டாடா' டிரைலர்..!

கவின் நடித்த 'டாடா' திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் இந்த ட்ரெய்லர் வைரல் ஆகி வருகிறது.