close
Choose your channels

இந்த வார பிக்பாஸ் வாக்கெடுப்பு: ஆபத்தான நிலையில் 3 போட்டியாளர்கள்!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய 9 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 3 போட்டியாளர்கள் மிக குறைந்த வாக்குகள் பெற்று ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா உள்பட 6 பேர் அதிக வாக்குகள் பெற்று எவிக்சனில் இருந்து தப்பித்து விடும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதேநேரத்தில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி ஒன்பது பேரில் அபினய், அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய மூவர் மிக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த மூவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஞாயிறன்று இந்த மூவரில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.