close
Choose your channels

ஒரே ஒரு ஸ்லோகன்: தாமரையை கதறி அழவைத்த பிரியங்கா!

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு ஸ்லோகனை சொல்லி தாமரையை கதறி அழ வைத்த பிரியங்காவின் செயல் குறித்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் தற்போது அரசியல் மாநாடு என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் மூன்று அரசியல் கட்சியாக போட்டியாளர்கள் பிரிந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வெளியான முந்தைய புரமோவில் தாமரை மற்றும் அபினய் ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரியங்கா தனது கட்சியின் சுலோகமாக ’தெரியல தெரியல என்று சொல்றீங்க’ ’நாடகம் நன்றாக ஆடுறீங்க’ என்று கூறுகிறார்.

இதில் நாடகம் என்ற வார்த்தையை பிரியங்கா கேலி செய்வதாகவும் தன்னை குறிப்பிட்டு தான் சொல்வதாகவும் நினைத்துக்கொள்ளும் தாமரை கதறி அழுகிறார். அவருக்கு ஆறுதல் கூற ராஜூ முற்பட்ட போது, ‘நாடகம் என்பது என்னுடைய தொழில், அதை நான் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது, நான் குழந்தைக்கு பால் கூட கொடுக்காமல் நாடகத்திற்கு போயிருக்கின்றேன். எனக்கு இந்த விளையாட்டே வேண்டாம், எனக்கு நாடகம் தான் முக்கியம்’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் ’தெரியல தெரியல என்று சொல்றீங்க’ ’நாடகம் நன்றாக ஆடுறீங்க’என்பது எங்கள் கட்சியின் ஸ்லோகம் என்று கூறி பிரியங்கா சமாளிக்கின்றார். மொத்தத்தில் தாமரையை அடிக்க வேண்டிய இடத்தில் சரியான இடத்தில் அடித்து அவரை பிரியங்கா பின்னடையச் செய்து வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.