close
Choose your channels

பாலாஜி இடத்தில் நான் இருந்திருந்தால்? பிக்பாஸ் வின்னர் ஆரியின் பதில்!

Saturday, January 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஆரி, நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பாலாஜி இடத்தில் நான் இருந்திருந்தால் நானும் அதே தவறை செய்திருப்பேன் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஆரியும் பாலாஜியும் சிறையில் இருந்த போது இருவருக்கும் நடந்த பிரச்சனை குறித்து விளக்கமளித்த ஆரி, ‘பாலாஜியிடம் கோபப்பட வேண்டாம் என்றும், அது உங்களுக்கு தான் நல்லது என்றும், அமைதியாக இரு என்றும் கூறினேன். நான் கூறிய ஒரு வார்த்தை அவரை கோபப்படுத்தியதால் அவர் என்னிடம் மன்னிப்பு கேளுங்கள், நீங்கள் கூறிய வார்த்தையை வாபஸ் வாருங்கள் என்று சொன்ன போது உடனடியாக நான் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கி மன்னிப்பும் கேட்டேன்

இதற்குமேல் பாலா மேலும் கோபப்பட்டு ஒரு தவறான செயலை செய்து விடக் கூடாது, அங்கு ஒரு வன்முறை கோபத்தால் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அக்கறைதான் எனக்கு இருந்தது. ஒருவேளை பாலாஜி இடத்தில் நாம் இருந்தாலும் நானும் அதே போல் கோபப்பட்டிருப்பேன். நான் பல தோல்விகளை பார்த்து பல அனுபவங்களை கடந்து வந்ததால் எனக்கு இருந்த மெச்சூரிட்டி காரணமாக அன்று நான் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தேன். இதேபோல் பாலாஜியும் பல தோல்விகளை தாண்டி, அனுபவம் பெற்று மெச்சூர் ஆகிவிடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று ஆரி கூறினார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.