close
Choose your channels

பாலாஜியுடன் பேசுவதில்லையா? நடிகை யாஷிகா ஆனந்த் அளித்த பதில்!

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாவும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்பது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது பாலாஜியும் யாஷிகாவும் பேசி கொள்வதில்லை என்று கூறப்படுகிறது

இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் கேள்வி எழுப்பினார். பிக்பாஸ் சீசன் 4 பாலாஜி உங்கள் நண்பரா? நண்பராக இருந்தால் நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை’ என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த யாஷிகா, ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம், தற்போது அவரை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாட்களுக்காக தான் அவர் பல ஆண்டுகளாக ஆசைப்பட்டார்’ என்று மட்டும் கூறி உள்ளார்

இந்த பதிலில் யாஷிகா, ‘நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம்’ என்று கூறியதிலிருந்து தற்போது அவர்கள் இருவரும் நண்பராக இல்லை என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளதாகவே தெரிகிறது நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் யாஷிகா கலந்து கொள்வதற்கு முன்பே பாலாஜியும் யாஷிகாவும் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர் என்பதும் அப்போது அவர்கள் இருவரும் நண்பர்களாகத்தான் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.