பாலாஜியுடன் பேசுவதில்லையா? நடிகை யாஷிகா ஆனந்த் அளித்த பதில்!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாவும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்பது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது பாலாஜியும் யாஷிகாவும் பேசி கொள்வதில்லை என்று கூறப்படுகிறது

இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் கேள்வி எழுப்பினார். பிக்பாஸ் சீசன் 4 பாலாஜி உங்கள் நண்பரா? நண்பராக இருந்தால் நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை’ என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த யாஷிகா, ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம், தற்போது அவரை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாட்களுக்காக தான் அவர் பல ஆண்டுகளாக ஆசைப்பட்டார்’ என்று மட்டும் கூறி உள்ளார்

இந்த பதிலில் யாஷிகா, ‘நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம்’ என்று கூறியதிலிருந்து தற்போது அவர்கள் இருவரும் நண்பராக இல்லை என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளதாகவே தெரிகிறது நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் யாஷிகா கலந்து கொள்வதற்கு முன்பே பாலாஜியும் யாஷிகாவும் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர் என்பதும் அப்போது அவர்கள் இருவரும் நண்பர்களாகத்தான் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது

More News

இவர்தான் நாம தேடிக்கிட்டு இருந்தவர்: பிக்பாஸ் பாலாஜி வெளியிட்ட புகைப்படம்!

இவர் தான் நாம தேடிக் கொண்டிருந்தவர் என்று பிக்பாஸ் பாலாஜி வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'அண்ணாத்த' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில்

டெஸ்ட் களத்தில் இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலமையா?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு இடையிலான போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

'மாஸ்டர்' படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்!

அமெரிக்காவின் இண்டியானோபோலிஸ் பகுதியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.