close
Choose your channels

யாஷிகாவை நான் விபத்தில் மாட்டிவிட்டேனே? உண்மையை உடைத்த பிக்பாஸ் பாலாஜி!

Sunday, August 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிக்பாஸ் நடிகை யாஷிகா மகாபலிபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருக்கும் போது கார் விபத்தில் சிக்கினார் என்றும் அந்த விபத்தில் அவரது நெருங்கிய தோழி மரணம் அடைந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த விபத்தில் யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு யாஷிகா ஒரு விபத்தை ஏற்படுத்தி இருந்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் அந்த விபத்தை ஏற்படுத்தியது பிக்பாஸ் பாலாஜிதான் என்றும், பாலாஜியை காப்பாற்றுவதற்காக வந்த யாஷிகாவை பாலாஜி மாட்டிவிட்டு விட்டு அவர் தப்பி விட்டதாகவும் ஒரு சில தரப்பினர் கூறினார்.

இதற்கு இதுவரை விளக்கம் அளிக்காத பாலாஜி முருகதாஸ் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நான்தான் விபத்தை ஏற்படுத்தி ஒரு நபரை காயப்படுத்தி விட்டதாக இன்னும் ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர். இதற்கு இது வரை நான் விளக்கமளிக்கவில்லை. அதற்கு காரணம் நான் நல்லவன் என்று எல்லோரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால்தான்.

ஆனால் தற்போது இது குறித்து விளக்கம் அளிக்க முன் வந்துள்ளேன். நான் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த ஆறு வருடத்தில் நான் ஒருமுறை கூட குடித்து விட்டு காரை ஓட்டியது இல்லை. என்னுடைய டிரைவிங் லைசன்ஸில் எந்தவிதமான புகாரும் யாரும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை. இனிமேலும் நான் குடித்துவிட்டு வண்டி ஓட்ட மாட்டேன். ஏனெனில் அது சட்டவிரோதம் என்று எனக்கு தெரியும். என்னை பின்பற்றுபவர்களுக்கு அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக நான் மிகவும் கவனத்துடன் தான் வண்டி ஓட்டுவேன்.

என்னுடைய பைக்கை கூட நான் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல மாட்டேன். அது நமக்கு மட்டுமின்றி நம்முடன் பயணம் செய்பவர்களுக்கும் பாதுகாப்பானது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது யாஷிகாவுக்கு விபத்து நடந்ததை அடுத்து அவருடைய பழைய விபத்தையும் சிலர் குறிப்பிட்டு அதில் என்னையும் இணைத்து குறிப்பிட்டு வருவதால்தான் இந்த விளக்கத்தை நான் அளித்துள்ளேன் என்று பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.