தளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த 'பிகில்' நடிகை

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று அவருக்கு மறக்க முடியாத பரிசு ஒன்று கொடுத்த நடிகை குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

‘பிகில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற கால்பந்து அணியில் மின்னொளி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை ஆதிரை சௌந்தரராஜன். இவர் தான் விஜய்க்கு மறக்க முடியாத பரிசினை அளித்தவர்

‘பிகில்’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளுக்கு மறுநாள் அவர் படப்பிடிப்புக்கு வந்ததாகவும் அப்போது தான் அவரிடம் சென்று ’நான் உங்களுக்காக பிறந்தநாள் பரிசு ஒன்றை கொடுக்க விரும்புகிறேன்’ என்று கூறியதாகவும் அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

விஜய்க்காக  நான் தயார் செய்து வைத்திருந்த பரிசு ஒரு வித்தியாசமானது என்றும் அந்த பரிசு ஒரு கேம் இயந்திரம் என்றும் அதில் ‘பிகில்’ படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணியின் வீராங்கனை போன்ற பொம்மைகள் இருந்ததாகவும் அந்த பொம்மைகளில் ‘பிகில்’ படத்தில் இடம்பெற்றிருந்த வீராங்கனையின் பெயர்கள் மற்றும் நம்பர்களை நானே பதிவு செய்தேன் என்றும் கூறினார் 

மேலும் இந்த கேமில் விஜய் அவர்களின் கேரக்டரையும் பொம்மை போல் செய்து இணைத்திருந்தேன் என்றும், இந்த பரிசை விஜய் அவர்கள் பார்த்தவுடன் ‘உண்மையாகவே பிகில் படத்தில் இடம்பெற்ற அணியை பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது என்றும் இந்த பரிசை நான் எப்போது பார்த்தாலும் பிகில் படத்தின் ஞாபகம் வரும் என்று அவர் கூறியதாகவும் ஆதிரை கூறினார்.

மேலும் இந்த கேம் இயந்திரத்தை பெட்ரூமில் வைத்துக்கொள்வேன் அவ்வப்போதும் விளையாடுவேன் என்று விஜய் கூறியதாகவும் ஆதிரை கூறியுள்ளார். எனது பரிசை வாங்கி பார்த்த விஜய் இது எனக்கு மறக்க முடியாத பார்க்க முடியாத பரிசு என்று கூறியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஆதிரை கூறினார்

More News

அதிபர் ட்ரம்ப்பின் பதிவை அதிரடியாக நீக்கிய பேஸ்புக், டிவிட்டர்!!! காரணம் என்ன தெரியுமா???

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் நியூஸ்க்கு தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டியை அளித்து இருக்கிறார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்!!! கத்தியால் மூக்கை அறுத்த கொடூரக் கணவன்!!!

கொரோனா ஊரடங்கினால் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான வன்முறை எப்போதும் மற்ற உலக நாடுகளைவிட அதிகம் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அமைப்பு,

போதையில் டார்ச்சர் தாங்கல… கணவனை கொலைசெய்து, நன்றாக உப்புபோட்டு கழுவி, பிரிட்ஜில் வைத்த மனைவி!!!

ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுவதாக பெண்கள் அமைப்பு தொடர்ந்து கூறிவருகிறது.

'வலிமை' படப்பிடிப்பு குறித்து அஜித் எடுத்த அதிரடி முடிவு!

தல அஜித் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது

நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு! காலாண்டு அரையாண்டு தேர்வுகள் ரத்தா?

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி