close
Choose your channels

மயிலும் நாங்களே, புலியும் நாங்களே: பிகில்' நடிகையின் மாஸ் குடியரசு தின லுக்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த பிகில்’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ள குடியரசு தின சிறப்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிய பிகில்’ படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்தவர் இந்திரஜாசங்கர். இவர் இன்று குடியரசு தினவிழாவை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தேசியக் கொடியை கையில் வைத்து கொண்டு பாயும் புலி போல இவர் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்களுக்கு இவர் கேப்ஷனாக கூறியவை பின்வருமாறு:

வறுமையை துரத்தி வளமையை காண்போம் வேற்றுமையில்லா ஒற்றுமையை காண்போம்
பசியில்லா வயிறைக் காண்போம் தீபகற்பமாம் இந்தியா மாறா சீரும் சிருத்தையேன மாறுவோம் நாம்........வந்தேமாதரம்

மூவர்ணக் கொடியில் காவி காட்டுவது - தியாகத்தை வெண்மை வெளிக்கொணர்வது - தூய்மையை
பச்சை விவரிப்பது - விவசாய பசுமையை... நிறங்களில் வேற்றுமையிருந்தாலும் மனங்களில் ஒற்றுமையுடன் வாழ்வோம் நாம்...... ஜெய்ஹிந்த்

மழை அறிந்து ஆடும் அழகு மயிலும் நாங்களே....... பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே.......அழகு மயிலாக வாழவும்,பாயும் புலியாக மாறவும் தயாராவோம்....... வாழ்க வையகம்

தாயின் தொப்புள்க்கொடி எவ்வளவு வலிமையானதோ அவ்வளவு வலிமை மிக்கது நம் தேசியக்கொடியும். அவ்வலிமையை மேம்படுத்த ஒன்றுபடுவோம்.அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்

இந்திரஜாவின் இந்த பதிவுக்கு பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.