close
Choose your channels

கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்து கூறிய 'பிகில்' நடிகை!

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் ஆதரவில் ’உதவும் உள்ளங்கள்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் 1222 குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி கொண்டாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ‘பிகில்’ நடிகை இந்துஜா மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து இந்துஜா கூறியபோது, "பிகில் படத்தில் நடிக்க படக்குழுவினர் என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி கிருத்திகா உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

அதேபோல் நடிகை அதுல்யா ரவி கூறியபோது, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.