close
Choose your channels

'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்!

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘பிகில்’ திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

உதவி இயக்குனர் செல்வா ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்தே தற்போது ஐகோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை வாபஸ் பெறவும், ஐகோர்ட்டை அணுகவும் எதன் அடிப்படையில் அனுமதி அளித்தது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25க்குள் அளிக்கபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.