close
Choose your channels

'பிகில்' படத்தின் அட்டகாசமான அப்டேட்டை தந்த அர்ச்சனா!

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் அப்டேட்டுக்கள் இந்த மாதம் அடிக்கடி வெளிவரும் என இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த வகையில் சற்றுமுன் அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 'பிகில் படத்தின் தெலுங்கு மாநில உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த படம் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என்றும் பதிவு செய்துள்ளார்.

தீபாவளி அன்று பிரபல தெலுங்கு நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தளபதியின் 'பிகில்' தமிழ்ப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் இவ்வளவு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. அட்லி இயக்கி வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.