close
Choose your channels

'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, உதவி இயக்குநர் கே.பி செல்வா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பில் மனுதாரர் செல்வா என்பவருக்கு திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்தது. மேலும் பிகில் படத்தை வெளியிட தடை ஏதும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி உதவி இயக்குனர் செல்வா நாளை திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் அந்த மனு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதும், அப்படியே ஏற்றுக்கொண்டாலும் பிகில் படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்கப்படுமா? என்பதும் நீதிபதியின் முடிவில்தான் உள்ளது என்று கூறப்படுகிறது

எனவே இப்போதைக்கு ‘பிகில்’ பட ரிலீசுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பதால் வரும் 25ஆம் தேதி பிகில் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகும் என்பதும் இந்த படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் முழுவதும் விற்றுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.