புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக காண்டம் கொடுத்த அரசு: ஏன் தெரியுமா?

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அவர்களுக்கு அரசே இலவசமாக காண்டம்கள் கொடுத்து அனுப்பிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பிகாருக்கு கடந்த சில நாட்களாக திரும்பி வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 28 முதல் 29 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வேறு மாநிலங்களில் இருந்து பீகாருக்கு வந்த தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு தனிமைப்படுத்துதல் காலமான 14 நாட்கள் முடிந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் தங்களுடைய வீட்டுக்கு செல்லும்போது அவர்களுக்கு இலவசமாக காண்டங்களை பீகார் அரசு வழங்கியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சென்றவுடன் தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்கவே இந்த காண்டம்கள் வழங்கப்பட்டதாக பீகார் அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் அரசின் இந்த நடைமுறையை அனைத்து மாநில அரசும் பின்பற்றலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

மணமகனுக்கு கொரோனா: கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது.

இன்னொரு பேரழிவு!!! அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி தகவல்!!!

வட இந்தியாவில் ஏற்பட்ட ஆம்பன் புயலின் தாக்கமே இன்னும் சரி செய்யப்படாத நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

மும்பை: கடந்த இரண்டு வாரங்களில் 4 மடங்காக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அமெரிக்காவில் 7 ஆவது நாளாக தொடரும் கறுப்பினத்தவர் போராட்டம்!!!  இராணுவத்தை அழைத்து இருக்கும் அதிபர் ட்ரம்ப்!!!

அமெரிக்காவின் மிணசோட்டா மகாணத்தில் மினியா காவல் நிலையப் பகுதியில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் காவல் துறையினரால் விசாரிக்கப்படும் போது உயிரிழந்தார்.

தலைமை செயலகத்திலும் புகுந்த கொரோனா: 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு எகிறிக் கொண்டே வருவதால்