'பைக் டாக்சி' திரைப்படம்.. பூஜையுடன் இனிதே தொடங்கிய படப்பிடிப்பு!!

  • IndiaGlitz, [Friday,March 15 2024]

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை, திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.

பைக் டாக்சி படத்தின் தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் பேசியதாவது, ‘இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் கணபதி பாலமுருகன் இதுவரை இயக்கிய இரண்டு படங்களுமே அனைவருக்குமான படம். அதில் ஒரு காட்சி கூட முகம் சுளிக்க வைக்காது. முக்கியமாக லைசென்ஸ் படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம். அதே போல் இந்தப்படமும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இருக்கும். எங்கள் நிறுவனம் சார்பில், வெற்றி படங்களை விட நல்ல படைப்புகளை மட்டுமே தர வேண்டும் என நினைக்கிறோம். இதில் ஏன் பெரிய ஹீரோ இல்லை எனக் கேட்கிறார்கள். இப்படம் மூலம் நக் ஷா சரண் எனும் மிகப்பெரிய நட்சத்திரத்தை அறிமுகப்படுத்துகிறோம். ஆண் பெண் வேறுபாட்டைக் கலைந்து, எங்கள் நிறுவனம் மூலம் அவரை நட்சத்திரமாக அறிமுகப்படுத்துகிறோம். பைக் டாக்சி ஓட்டும் ஒரு பெண் அவள் சந்திக்கும் மனிதர்கள் என ஒரு நாளில் நடக்கும் கதை.
இப்படம் மிகச்சிறப்பான சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.

இயக்குநர் கணபதி பாலமுருகன் பேசியதாவது, ‘என் படத்தின் தயாரிப்பாளர்கள், என் குருநாதர் சுசீந்திரன், என் குடும்பம் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த காலகட்டத்தில் மூன்று படங்கள் செய்வது என்பது மிகக் கடினமானது. அதையும் தாண்டி பல கஷ்டங்களுக்கு இடையில் தான் இப்படம் செய்கிறோம். வித்யா எனும் பைக் டாக்சி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதை தான் இப்படம், ஒரு நாள் 6 மனிதர்கள், 6 கதைகள் என மிகச் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு பெரிய வெற்றிப் படத்தை உருவாக்கும் முனைப்போடு தான் அனைவரும் வந்துள்ளோம். இப்படத்திற்காக ஆதரவளிக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

பைக் டாக்சி படத்தின் நாயகி நடிகை நக்ஷா சரண் பேசியதாவது, ‘இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இயக்குனர் சார் சிறப்பான பெண்கள் கதாபாத்திரத்தை எழுதுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எழுதியிருக்கும் கேரக்டரை, என்னால் முடிந்த வரை சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.

மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த ’சாமானியன்’ மற்றும் இயக்குநர் திரு சுசீந்திரன் தயாரித்த ’மார்கழி திங்கள்’ போன்ற திரைப்படங்களில் நடித்த நக்ஷா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்க, வையாபுரி, காளி வெங்கட் முதல் முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் நடிக்கவுள்ளனர்.

ஒரு பெண் பைக் டாக்ஸி ஓட்டுனர் ஒரே நாளில் சந்திக்கும் ஆறு சுவாரஸ்யமான நபர்களைப் பற்றிய கதை இது. இத்திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறிய நாய்க்குட்டி ஒன்று இடம்பெறுகிறது. மிகுந்த பொருட்செலவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

 

More News

'லொள்ளு சபா' நடிகர் சேஷுவுக்கு என்ன ஆச்சு? காவேரி மருத்துவமனையில் அனுமதி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் சேஷு, திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயாவின் ஒரிஜினல் முகத்தை பார்த்த ரோகிணி .. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடீர் திருப்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இதுவரை ரோகிணி, விஜயாவின் அன்பான ஒரு பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென அவரது இன்னொரு பக்கத்தை சந்திக்க

கவுண்டமணிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு.. 20 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!

சொத்து விவகாரம் காரணமாக 20 ஆண்டுகளாக நடிகர் கவுண்டமணி சட்ட போராட்டம் நடத்திய நிலையில் இன்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கடந்த கால வலிகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்த முந்தைய நடிகை மும்தாஜ்.

எனக்கான சொந்த வேதங்களை புரிந்து கொள்ள நான் எந்த முன் முயற்சியும் எடுக்கவில்லை.மிகவும் பொறுமையாகத்தான் அந்த புரிதல் கிடைத்தது..............

அமிதாப்பச்சன் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. ஒரு மணி நேரத்திற்கு முந்தைய எக்ஸ் பதிவு வைரல்..!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன் அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எக்ஸ் தளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில்