அர்ஜுன மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம்: பாஜக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தி ஆகிய இருவரையும் கட்சியின் முக்கிய பணிகளுக்கு நியமனம் செய்திருப்பதாக அறிவித்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினியால் நியமனம் செய்யப்பட்ட அர்ஜுன மூர்த்தி அவர்கள் ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த நிலையில் அந்த பதவியை அவர் உடனே ராஜினாமா செய்தார். மேலும் டுவிட்டரிலும் இதுகுறித்த மாற்றத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அவர்கள் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தி அவர்களுடைய ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்.

மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ரஜினிக்கும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி: பாஜக பிரமுகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும்,

வரிசையில் நிற்க மறுத்த அனிதா: 1 முதல் 13 வரை யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால்சென்டர் டாஸ்க் என்பது ஒவ்வொரு போட்டியாளரின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது போல், போட்டியாளர்களை ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது

பத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்!!! காரணம் தெரியுமா???

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகப் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை திருப்பி கொடுக்க உள்ளார்

25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி ஒருவர் தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை பிரதமர் மோடி

ரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அவர்களை நியமனம் செய்தார் என்பதை பார்த்தோம்