ஆட்சியை பிடிக்கின்றது பாஜக! முதல் சுற்றிலேயே மும்மடங்கு முன்னிலை

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே வந்துள்ளது. முதல் அரை மணி நேரத்தில் வந்த முன்னிலை நிலவரப்படி பாஜக கூட்டணி 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளிலும் மற்றவை 31 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க 273 தொகுதிகள் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்னும் சுமார் 100 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்துவிட்டால் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிடும்.

மேலும் விஐபி வேட்பாளர்களான பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல்காந்தி, கனிமொழி, நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தாலும் தமிழகத்தில் திமுக 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக இன்னும் எண்ணிக்கையையே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

15 வருடங்களுக்கு பின் மீண்டும் வில்லன்: ரஜினியின் தர்பாரில் பிரபல நடிகர்!

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது

'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது? காஜல் அகர்வால் தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில்

இயக்குனர் லோகேஷூக்கு 4 மாதங்கள் டைம் கொடுத்த விஜய்!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா!

நடிகை த்ரிஷாவை வெளிநாட்டு போலீசார் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் 'ராங்கி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காக சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கசடதபற' படத்தின் ஆறு ஒளிப்பதிவாளர்கள் இவர்கள் தான்

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு படத்தொகுப்பாளர்கள்