கமல் ஒரு அகங்காரம் பிடித்த முட்டாள், ரஜினி ஒரு கோழை: சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாக தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கிகள் என்று கூறிய சுவாமி சமீபத்தில் கமல், ரஜினி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல், ரஜினி இருவரையும் கோழைகள் என்று கூறியுள்ளார். அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசனைப் பொறுத்தவரை அகங்காரம் பிடித்த முட்டாள். ரஜினிகாந்த் இலங்கைக்கு பயந்து கொண்டு அங்கு செல்வதை ரத்து செய்து விட்டார். ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ளும் போது அனைத்தையும் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகு தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
சினிமாக்காரர்களுக்கு எப்பவும் பயம் தான். இதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கோழைகள் என்று சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சுவாமியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கமல், ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More News

மீண்டும் எழுச்சி பெறும் தமிழ் இளைஞர்கள்.

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காக இனிமேல் அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, மக்களே களத்தில் இறங்கினால்தான் காரியம் நடக்கும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி சென்னை மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டம். உலகப்புகழ் பெற்ற தமிழ் இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது

சென்னை மெரீனாவில் கடலில் இறங்கிய மாணவர்கள். பதட்டத்தில் போலீசார்

விவசாயிகள் மற்றும் நெடுவாசல் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட தொடங்கியுள்ளனர்.

பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழுவில் பிரபல நடிகை

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுமான் மகளும், டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், கடந்த சில வருடங்களாக பாஜகவில் இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'மாயா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கும், இந்த படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது...

கல் சிலைக்கு ரூ.2500 கோடி, உயிருள்ள விவசாயிகளுக்கு வெறும் ரூ.1750 கோடியா?

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு இந்த போராட்டத்தை இதுவரை சீரியஸாக கண்டுகொள்ளவில்லை...