ரூ.100 கோடி நஷ்ட ஈடு வேண்டும்.. சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய பாஜக நிர்வாகி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சந்தானம் தனது படத்தில் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பாடலை வைத்ததால், 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் "டி.டி. நெக்ஸ்ட் லெவல்" என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா தயாரித்த இந்த படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதில் இடம் பெற்ற "கோவிந்தா" என்ற பாடல்தான் கடந்த சில நாட்களாக சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இந்த பாடல், திருமலை திருப்பதி ஏழுமலையானை அவமதிக்கும் வகையில் உள்ளதாக, இந்து அமைப்புகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன. இந்நிலையில், சமீபத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் சந்தானம் இதற்கு விளக்கம் கொடுத்தார். "நான் கடவுளை நம்புவேன். எனவே, கடவுளை அவமதிக்கும் காட்சிகள் என்னுடைய படத்தில் இருக்காது," என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் மற்றும் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி, சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இருப்பதாகவும், மேலும் சர்ச்சைக்குரி
பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் இந்த நோட்டீஸ்க்கு பதிலளிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments