சூர்யாவை பாஜக மிரட்டுகிறது: முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Thursday,September 17 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தாலும் பாஜக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜகவினர் சூர்யாவை மிரட்டுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாளை அடுத்து திருச்சியில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்த கேஎன் நேரு அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவை பாஜகவினர் மிரட்டுகின்றனர் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் அனைவரையும் பாஜகவினர் மிரட்டுகின்றனர் என்றும், ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜக கையில் சிக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

More News

தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதைப்பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் பெயர்களை சொல்கிறேன்: நடிகை அதிரடி

அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி

உன்னை அரியணையில் ஏற்றாமல் போகிறேனே: சிகிச்சை பெறும் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே

மக்கள் குறைகளை விரைந்து கேட்கவும்… துரிதமாக நடவடிக்கை எடுக்கவும்… தமிழக முதல்வரின் புதியதிட்டம்!!!

மக்களின் பிரச்சனைகளை உடனடியாக அறிந்து அவற்றை தீர்த்து வைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் அமல்படுத்தி இருக்கிறார்.

கோவைக்கு பதில் சென்னை வந்த கிராமத்து மாணவி, உதவிய நல் உள்ளங்கள்: சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி

கல்லூரியில் சேருவதற்காக கோவைக்கு செல்வதற்கு பதிலாக தவறுதலாக சென்னைக்கு வந்த கிராமத்து மாணவிக்கு சென்னையில் உள்ள நல் உள்ளங்கள் செய்த உதவி சினிமா திரைக்கதையும் மிஞ்சும் அளவிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது 

போதைப்பொருள் விவகாரம்: ஊடகங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற தமிழ் நடிகை!

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா, போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.