close
Choose your channels

சூர்யாவை பாஜக மிரட்டுகிறது: முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தாலும் பாஜக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜகவினர் சூர்யாவை மிரட்டுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாளை அடுத்து திருச்சியில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்த கேஎன் நேரு அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவை பாஜகவினர் மிரட்டுகின்றனர் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் அனைவரையும் பாஜகவினர் மிரட்டுகின்றனர் என்றும், ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜக கையில் சிக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.