மீண்டும் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை: கானல் நீராகும் ஸ்டாலின் முதல்வர் கனவு

கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தமிழக மக்கள் மட்டும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர். பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமே வெற்றி பெற்றார். அதிமுக 37 தொகுதிகளிலும் பாமக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அதேபோல் இந்த தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராகவே தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். நாடு முழுவதும் பாஜக கூட்டணி 320க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சிக்கு தேவையான எண்ணிக்கையை பெற்றுவிட்டனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜகவுக்கு எதிராகவே முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. பாஜக இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அதிமுக ஆட்சி மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை என்பதை சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றது. 22 சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. இதே ரீதியில் முடிவும் அமைந்தால் அதிமுக ஆட்சி ஐந்து வருடங்களை நிறைவு செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வழி இல்லாததால் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையிலும், மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையிலும் திமுக தலைவர் ஸ்டாலின் நிலை உள்ளதால் அவரது முதல்வர் கனவு கானல்நீராகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More News

ஆட்சியை பிடிக்கின்றது பாஜக! முதல் சுற்றிலேயே மும்மடங்கு முன்னிலை

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே வந்துள்ளது.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் வில்லன்: ரஜினியின் தர்பாரில் பிரபல நடிகர்!

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது

'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது? காஜல் அகர்வால் தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில்

இயக்குனர் லோகேஷூக்கு 4 மாதங்கள் டைம் கொடுத்த விஜய்!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா!

நடிகை த்ரிஷாவை வெளிநாட்டு போலீசார் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் 'ராங்கி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காக சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.