close
Choose your channels

கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி..?

Sunday, May 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், இந்த நோய் எளிதாக பரவி விடுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பிலிருந்தே, நீரிழிவு நோயாளிகள், சீறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுப்பவர்களுக்கு, இந்த கருப்பு பூஞ்சை தொற்று எளிதில் பரவி விடுகிறது.

கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் என்னென்ன....?

1.கண்களும், சுற்றியுள்ள பகுதிகளில் வலி ஏற்படும், கண்கள் சிவந்து காணப்படும்

2.முகத்தில் தொடர்ந்து வலி ஏற்படும்

3.கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிறம் மாறுவது

4.திடீரென பார்வை இழத்தல்

5.கண்கள் வீக்கமடைந்து காணப்படும்

6. கருவிழிகள் துருத்திக்கொண்டே இருக்கும்

7. கருவிழிகள் அசையாமல் இருக்கும்

8. கண் தசைகளுக்கு வலுவு தரக்கூடிய நரம்புகளில் செயலிழப்பு ஏற்படும்.

9. கருப்பு நிறத்தில் புண் ஏற்படும்

10.மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும்.

11. மூக்கில் நீர் வடியும் அல்லது இரத்தம் வடியும்.

யாருக்கு இந்நோய் பரவுகிறது...?

கோவிட் தொற்று ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவில் கட்டுப்பாடு இல்லாதபோது கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தொற்றிக்கொள்கிறது.

கொரோனாவிலிருந்து குணமடைந்து, சிகிச்சை பெறும் குறிப்பிட்ட சில நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள், அதிக மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்கள் தீவிர சிகிச்சை எடுத்துவருவதால், கணையத்தில் பாதிப்பும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாக இருக்கும். இக்காரணங்களால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.

சிகிச்சை பெறுவது எப்படி..?

கருப்பு பூஞ்சை நோயை ஆரம்பத்திலே கண்டறிந்தால், குணப்படுத்தலாம். காது, தொண்டை, கழுத்து (ENT) சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்களை அணுகினால், உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படும்.

கருப்பு பூஞ்சை நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி..?

சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்தல், மருத்துவர் பரிந்துரை செய்த உணவுமுறையை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.
தினமும் உங்கள் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.

தாங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளவோ, நிறுத்தவோ கூடாது.

சர்க்கரை நோயாளிகள் உட்பட, மேலே குறிப்பிட்டுள்ள நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துவது, அடிக்கடி கைகழுவுதல் கட்டாயமாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.