பீதியை கிளப்பும் பிளாக் பங்கஸ்… 50 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Friday,May 14 2021]

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயில் இருந்து மீண்டு வரும் சிலருக்கு மியூகோர்மைகோசில் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதாக இந்திய மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக கவலை தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் இந்த பூஞ்சைத் தொற்றால் 52 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநிலச் சுகாதாரத்துறை தற்போது அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது.

கருப்பு பூஞ்சை எனப்படும் பூஞ்சை தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோன நோயாளிகளுக்கு அரிதாக தோன்றும். இந்த நோய் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அதுவும் கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போன நபர்களின் உறுப்புகளில் மியூகோர்மைகோசில் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி சில தினங்களிலேயே அவர்களின் உறுப்புகளை சிதைத்து விடுவதாகவும் அதோடு இந்த பூஞ்சை மூளையைத் தாக்கும்போது விரைவில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த பூஞ்சையினால் சிதைக்கப்பட்ட உறுப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. இதனால் மும்பையில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்கள் அகற்றப்பட்ட கொடூரமும் நடந்து இருக்கிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களில் மட்டுமே 1,500 க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்ட 52 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதனால் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு எதிராக செலுத்தப்படும் தொற்றுக்கு செலுத்தப்படும் Amphotericin-B எனப்படும் மருந்துக்கு அந்த மாநில அரசு தற்போது டெண்டர் விடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

ரஜினி மகள் கொடுத்த ரூ.1 கோடி குறித்து கஸ்தூரியின் கமெண்ட்!  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக செலவீனம் அரசுக்கு இருப்பதாகவும் எனவே அரசுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள்

சிம்பு படத்தை தடை செய்ய வேண்டும்: இயக்குனரே வழக்கு தொடுத்ததால் பரபரப்பு!

சிம்பு நடித்த படத்தை படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என அந்த படத்தின் இயக்குனரே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மொட்டமாடியில் மகள்களுடன் 'குக் வித் கோமாளி' கனி: வைரல் புகைப்படங்கள்

சமீபத்தில் முடிவடைந்த 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பல வாரங்கள் ஆகிய பின்னரும் ரசிகர்கள்

'மாஸ்டர்' நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்: ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டு பிளாக் செய்த நடிகை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவரை இன்ஸ்டாகிராம் பயனாளி ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது

"இரக்கமுள்ள மனசுக்காரன், ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்".....ஆட்டோக்காரரை பாராட்டிய முதல்வர்....!

மதுரையில் இலவசமாக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டியுள்ளார்.