close
Choose your channels

அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா புளூசட்டை மாறன்? சென்னை தியேட்டரில் பரபரப்பு!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன், அஜித் ரசிகர்களால் சென்னையில் உள்ள திரையரங்கில் தாக்கப்பட்டதாக தகவல் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை தொடர்ந்து தாக்கி புளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, அஜித்தை தனிப்பட்ட முறையிலும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையிலுள்ள பிவிஆர் திரையரங்கில் புளூசட்டை மாறன் படம் பார்க்க சென்றதாகவும் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள புளூசட்டை சட்டை கூறியிருப்பதாவது: தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ...வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி.

இந்த நிலையில் ஒரு திரைப்பட விமர்சகர் திரைப்படத்தில் உள்ள குற்றம் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் தனிப்பட்ட முறையில் நடிகரை விமர்சனம் செய்யக்கூடாது என்றும் தரம்தாழ்ந்த விமர்சனம் விமர்சகரின் நம்பகத்தன்மையை இழக்கக்கூடும் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் விமர்சனம் செய்தவரை தாக்குவது பெரும் பிரச்சினையில் முடியும் என்றும் விமர்சனத்திற்கு பதிலடி எதிர் விமர்சனம் தான் என்றும் நடுநிலை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.