சட்டமன்ற தேர்தலை குறிவைக்கும் பாபிசிம்ஹா

  • IndiaGlitz, [Wednesday,April 06 2016]
பாபிசிம்ஹா நடித்த 'கோ 2' திரைப்படத்தில் தற்கால அரசியல், டாஸ்மாக், வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த படத்தை தேர்தலுக்கு முன்னர் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை விறுவிறுப்புடன் செய்து வருகின்றன. இந்நிலையில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் அதிகம் அடங்கிய 'கோ 2' திரைப்படம் வெளிவந்தால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் முதல்வரையே கடத்தும் கதை என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
பாபிசிம்ஹா, நிக்கிகல்ராணி, நாசர், கருணாகரன், மயில்சாமி, ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சரத் இயக்கியுள்ளார். எல்ட்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.,

More News

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணி வீரர்களின் முழுவிபரம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் எட்டு அணிகள் கலந்து கொள்ளவிருக்கின்றன...

விஷாலுக்காக மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய வடிவேலு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்த வடிவேலு, தற்போது விஷால்...

விக்ரம்பிரபுவின் 'வாஹா' ஆடியோ ரிலீஸ் தேதி

வளர்ந்து வரும் இளம் நாயகனான விக்ரம்பிரபு தற்போது வாஹா, வீரசிவாஜி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்...

'தெறி' படத்திற்கு ஏற்பட்ட திடீர் ஒத்திவைப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்று அனைத்து பாடல்களும்...

இளையதளபதி விஜய்யின் 'தெறி' ரன்னிங் டைம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...